Wednesday, April 3, 2013

காதல்

உன்னை நான் வைத்த கண் வாங்காமல்,
நான் பார்த்த போது,
நீ சொன்னாய்,
"உன்ன கொல்ல போறேன் பார்" என்று..

என்றோ செத்தவனை மீண்டும் எப்படி 
கொல்வாயடி நீ..

பார்த்த தருணத்திலேயே என்னை,
கூறு போட்டு கொன்றவளடி நீ!!


===================================================

காதல்,
ஓர் உயிர் பறிக்கும் விளையாட்டு,
மயிர் கூச்செறியும் மானசீக விளையாட்டு,

உன்னில் பறித்த உயிரை,
எனக்குள் சேர்க்கும்.

என்னில் பறித்த உயிரை,
உன்னுள் ஊற்றும் .

உருக உருக பெருகும்,
பெருக பெருக உருகும்.

எரிய எரிய கரையும்,
கரைய கரைய எரியும்.

ஈர் உயிரும்,
ஓர் உயிராய் மாறும்.!!

காதல்,
ஓர் உயிர் பறிக்கும் விளையாட்டு!!
=============================================

மானுடம் - கடவுளின் படைப்பு,
காதல் - சாத்தானின் படைப்பு..

வாழ்க்கையை வாழ
மானுடத்தை - படைத்தான் கடவுள்!!

வாழ்க்கையை புரிந்துகொள்ள,
காதலை - படைத்தான் சாத்தான்!!
=====================================================

உன்னை நினைக்கும் நேரங்களில்,
என்னை மறந்து இருப்பேன்!!

உன்னை மறக்கும் நேரம் வந்தால்,
மண்ணில் புதைந்து இருப்பேன்!!

=====================================================

No comments:

Post a Comment