Wednesday, January 25, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் !!

கட்டிய காளைகளுக்காக ,
அவிழ்த்துவிட்ட சிங்கங்களாய்,
போராடிக் கொண்டிருக்கிறார்கள்,
எங்கள் சினம் கொண்ட தமிழ் இளைஞர்கள்...!!

கணம் நீதிபதி அவர்களே,
காட்டு சிங்கங்களை அடக்க கேட்டீர்களே,
அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம், 

உங்களால் முடிந்தால், வெகுண்டெழுந்திருக்கும்,
என் தமிழ் நாட்டு சிங்கங்களை அடக்கி காட்டுங்கள்!!

அலங்காநல்லூர் விஷயத்தில், 
தமிழ் நாட்டையே அடங்காநல்லூராய் மாற்றி விட்டீர்கள்!!

சோடை போகாது, என் மறத்தமிழினம்!!

எங்கெங்கோ சிதறுண்டிருந்த,
என் இனத்தை,
ஒன்றாய் சேர்த்த பெருமை,
வெட்கம் கெட்ட PETA வை சேரட்டும்!!

அதற்கு என் நடு விரல் சலாம் போடட்டும்!!

வாழ்வில் முதல் முறையாய் ஏங்குகிறேன்,
தமிழ் நாட்டில் இல்லையே என்றும்,
மாணவனாய் இல்லையே என்றும்.!!

- தமிழ் நாட்டில் இல்லாத தமிழனாய்,
அயல் நாட்டில் இருந்தாலும் எப்போதும் மறத்தமிழனாய் !!
பாலசுப்பிரமணியன் கணபதி...

No comments:

Post a Comment