Wednesday, January 25, 2017

ஜல்லிக்கட்டு போராட்டமும் , அரசியல் வெற்றியும் !!

சிங்கங்களை வேட்டையாடிய நரிகள்!!

மானங்கெட்ட மத்திய அரசு !!
தரங்கெட்ட தமிழக அரசு !!

பெண்மைக்குள் ஆண்மையை கண்ட நாட்கள் !!
ஆண்மையையே மலடாக்கிய தடியடி நாட்கள் !!

உடைக்கப்பட்டது கைகளையும், கால்களையும் அல்ல !!
ஒருங்கிணைக்கப்பட்ட இதயங்களை!!

கேட்டது 4 மணிநேர அவகாசம் !! - ஆனால்,
கிடைத்ததோ தடியடி தள்ளாட்டம் !!

இருட்டறையிலும் இடி விழுந்திருக்கும்,
கருவறையிலிருந்து போராடிய என் சிசுவிற்கு !!

ஏழு நாள் போராட்டத்தை ,
அரைநாளில் ஏழரையாக்கிவிட்டனர் !!

அடங்காநல்லூரான என் தமிழகத்தை ,
அலங்கோலநல்லூராய் மாற்றிவிட்டனர் !!

தெளிந்த நீரில் கலக்கப்பட்டது அரசியல் சாயம்!!
அதனால் களக்கப்பட்டதோ என் இளைஞனின் வேகம் !!

கலங்காதே தமிழா!!
காலம் கைகொடுக்கும் !!
நாளை உன்னுடையதுதான் !!

துணிந்து போராடு!!
உலகமே உன்னோடு !!

No comments:

Post a Comment